அசுர வேகத்தில் டெல்டா கொரோனா.. அலறும் 85 நாடுகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 24, 2021

அசுர வேகத்தில் டெல்டா கொரோனா.. அலறும் 85 நாடுகள்

அசுர வேகத்தில் டெல்டா கொரோனா.. அலறும் 85 நாடுகள்


முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா கொரோனா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு வெளிநாடுகளுக்கும் பரவிவிட்டது.

குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் டெல்டா கொரோனா அச்சுறுத்தலாக இருக்கிறது. டெல்டா கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
மறுபுறம், கொரோனாவை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு டெல்டா கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்டா கொரோனா 85 உலக நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபோக, ஆல்பா கொரோனா 170 நாடுகளிலும், பீட்டா கொரோனா 119 நாடுகளிலும், காமா கொரோனா 71 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நான்கு உருமாறிய கொரோனா வைரஸ்களின் பரவலை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆல்பா கொரோனாவை காட்டிலும் டெல்டா கொரோனா மிக மிக வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழல் தொடர்ந்தால் மற்ற கொரோனா வைரஸ்களை காட்டிலும் டெல்டா கொரோனா ஆதிக்கம் செலுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad