தமிழகத்தில் ஆபத்தான டெல்டா பிளஸ் வைரஸ்; மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உருமாறிய டெல்டா பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு-விற்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொடர்பான மரபணுக்களை இன்சாகோக் என்ற சோதனைக் கூடங்களின் கூட்டமைப்பு வரிசைப்படுத்தி வருகிறது. மேலும் குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களின் சுகாதாரத்தில் மாறுபாடாக ஏதேனும் தோன்றினால் அதுபற்றிய தகவல்களையும் சரியான நேரத்தில் கொடுக்கிறது.
No comments:
Post a Comment