பாஜக சர்வாதிகார ஆட்சி; சொல்றது யாருன்னு பாருங்களேன்!
மத்தியில் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்ததோடு தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எம்.எல்.எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் 7,500 ரூபாய் நிவாரண தொகை வழங்கயை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கேகாரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment