வந்து சேர்ந்த காவிரி நீர்; சர்ப்ரைஸ் கொடுக்க ரெடியான மேட்டூர் அணை!
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடியும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5,400 கன அடியும் என மொத்த 10,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
இந்த நீர் நேற்று காலை தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதையடுத்து ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இங்கு நீர்வரத்து காலையில் 1,200 கன அடியாக இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து 4,000 கன அடியாக உயர்ந்து, மாலையில் 7,000 கன அடியை தொட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்த காவிரி நீர்
இந்நிலையில் காவிரி நீர் இன்று அதிகாலை மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 686 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 89.36 அடியாக இருக்கிறது.
No comments:
Post a Comment