தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் ரயில்கள் இயக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் ரயில்கள் இயக்கம்

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் ரயில்கள் இயக்கம்


தமிழகத்தில், நாளை மறுநாள் முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இதனால், பல சிறப்பு ரயில்கள் மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுதினம் அதாவது, வரும் 20ம் தேதி முதல், முதற்கட்டமாக, 10 சிறப்பு ரயில்களை இரு வழிகளிலும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து, கோயம்புத்தூர், ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad