எதற்காக ஆற்றுக்குள் இறங்கினார் தங்கத் தமிழ்ச்செல்வன்?
தேனி மாவட்டம் போடியில் உள்ளது கொட்டக்குடி ஆறு. தமிழ்நாடு-கேரளா இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் இந்த ஆ, போடி பகுதி மக்களின் குடிநீர்த் தேவையையும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரையும் கொடுக்கிறது.
கொட்டகுடி ஆற்றில் செல்லும் தண்ணீர் முல்லை ஆறு, வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையில் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
வறண்ட காலங்களில் போடி பகுதியில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் மக்களின் தடுப்பணை கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தடுப்பணை கட்ட களத்தில் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன்.
அதற்காக இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று கொட்டகுடி கொம்புதூக்கி அய்யனார் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அதிகாரிகளுடன் ஆற்றில் இறங்கித் தங்கத் தமிழ்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை கோட்டை திட்ட வடிவமைப்பு தலைமை பொறியாளர் சௌவுந்தர் தலைமையில் செயற்பொறியாளர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது தடுப்பணை கட்டும் பணிக்கான இடத்தை தேர்வு செய்து திட்டமதிப்பீடு செய்ய அதிகாரிகள் தங்கத் தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment