உதயமாகிறதா கள்ளுக் கடை: ஒகே சொல்வாரா முதல்வர் ஸ்டாலின், கோவை விவசாயிகள் ஏக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

உதயமாகிறதா கள்ளுக் கடை: ஒகே சொல்வாரா முதல்வர் ஸ்டாலின், கோவை விவசாயிகள் ஏக்கம்!

உதயமாகிறதா கள்ளுக் கடை: ஒகே சொல்வாரா முதல்வர் ஸ்டாலின், கோவை விவசாயிகள் ஏக்கம்!




கோவை மாவட்டத்தில், நாராயணசாமி நாயுடு விவசாயச் சங்கத்தின் சார்பில், 2009ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, கள் இறக்க அனுமதி வேண்டி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கள்ளு கடைகளை மூடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, கோவை மாவட்ட ஆணையாளர் தீபக் எம் தாமோரிடம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும். கள் தடை செய்யப்படக்கூடாது” எனக் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் பாபு, “தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில், மாநில அரசுகள் கள் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது சத்தான பானம் மட்டுமே, ஆல்கஹால் மீது முழுமையான தடை இருந்தபோதிலும், இது இயற்கையான பானம், எனவே இதனைத் தமிழ்நாட்டில் மீண்டும் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் சத்தான பானங்களான கள் உள்ளிட்டவற்றை இறக்கத் தமிழ்நாடு அரசு அனுமதித்தால், பொது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். தமிழ்நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” எனக் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad