வரதட்சணை கொடுமையால் இறந்த பெண் டாக்டர்: வாரிசு நடிகருக்கு எழுதிய காதல் கடிதம்
கேரளாவை சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவரான அவரை கணவர் கிரண் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். திருமணத்தின்போது விஸ்மயாவின் பெற்றோர் அளித்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார் பிடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து வந்திருக்கிறார் கிரண்.
கார் விவகாரம் தொடர்பாக விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் விஸ்மயா. 24 வயதே ஆன விஸ்மயா வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
விஸ்மயாவின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்து இன்று இவர், நாளை என் மகள் என்று பிரபல நடிகர் ஜெயராம் தெரிவித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலர் தினத்தன்று தன் கல்லூரியில் நடந்த காதல் கடிதம் எழுதும் போட்டியில் விஸ்மயா கலந்து கொண்டிருக்கிறார். அவர் நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு காதல் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த காதல் கடிதம் வைரலாக வேண்டும், அதை பார்த்துவிட்டு காளிதாஸ் தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் விஸ்மயா. ஆனால் அவர் இறந்த பிறகு தான் அந்த கடித விவகாரமே வெளியே வந்தது. விஸ்மயா சிரித்த முகமாக இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
இந்நிலையில் காதல் கடிதம் குறித்து அறிந்த காளிதாஸ் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அன்பு விஸ்மயா. உங்கள் அன்புக்குரியவர்களை விட்டு சென்ற பிறகே நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. மன்னித்து விடுங்கள். யாரும் கேட்காத அந்த குரலுக்கு, எரிந்துபோன அந்த கனவுகளுக்கு இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment