சேலம் வக்கீல் குடும்பமே பலி: உதவிக்கு வந்த இளைஞர்களை மெச்சும் ஊர் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

சேலம் வக்கீல் குடும்பமே பலி: உதவிக்கு வந்த இளைஞர்களை மெச்சும் ஊர் மக்கள்!

சேலம் வக்கீல் குடும்பமே பலி: உதவிக்கு வந்த இளைஞர்களை மெச்சும் ஊர் மக்கள்!

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் வெற்றிவேல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு போன் மூலம் தொடர்பு தொடர்புகொண்டு “என்னோடு பணியாற்றும் வழக்கறிஞர் ஜான் என்பவர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று அவரது தாய் டெய்சிரோஸ்லின்(70) இறந்துவிட்டார். அவர்களை அடக்கம் செய்ய உதவி வேணும்” என்றார்.

இதனையடுத்து உடனே சேலம் வடக்கு மாநகர DYFI நிர்வாகிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர மாநகர செயலாளர் பிரவீன் குமார் தகவல் தெரிவித்தார்

அடுத்த சில நிமிடங்களில் மாநகர செயலாளர் ஆர் குருபிரசன்னா, மாநகர பொருளாளர் டி மனோகரன், மாநகர துணைத்தலைவர்கள் ஆர்வி கதிர்வேல், எஸ் சசிக்குமார் ஆகியோர் பாதுகாப்பு உடை (பிபிஇ கிட்) அணிந்து சென்றனர்.

எஸ்கேஎஸ் மருத்துவமனையிலிருந்து சேலம் ஜங்சன் ரயில்நிலையம் ஆர்எம்எஸ் அருகில் உள்ள கிருத்துவ மயானத்தில் அடக்கம் செய்து முடித்தார்கள். அச்சப்படாமல் பயப்படாமல் சாதுரியமாக இறந்தவர்களின் உடலைக் கையாண்டு அடக்கம் செய்தது மனிதநேயத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது.



இது மட்டுமல்ல இந்த இரண்டாம் அலை தொற்று காலத்தில் இதுவரை 16ஆவது உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த இளைஞர்கள் பாதுகாப்பாக ஒருமாத காலமாகத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி ஓடிக்கொண்டே இருக்கும் ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்களுக்குப் பொதுமக்கள் பாராட்டுகள் குவிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad