பெண் அளித்த புகாரால் போலீஸ் அதிர்ச்சி: தேனி சம்பவம்!
தேனி மாவட்டத்தில் 2 குழந்தைகளுடன் கஷ்டப்படுத்துகிறேன் என சொன்னவருக்கு போலீசாரின் செய்த உதவி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் வருமானமின்றி இரண்டு குழந்தைகளுடன் தவித்து வருவதாக புகார் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீஸார் சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
தேனி போலீசாரின் இந்த செயல் மாவட்ட மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment