நெஞ்செரிச்சல் பாட்டி வைத்தியம்
நெஞ்செரிச்சல் பாட்டி வைத்தியம் | Heartburn Treatment in Tamil
நாம் சிலவகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணம் காரணமாக சிலருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும் அப்படி பட்டவர்கள் கீழ் சொல்லப்பட்டுள்ள கஷாயத்தை செய்து அருந்துவதன் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனை சரி ஆகும்.
கஷாயம் செய்முறை:
தேவையான பொருட்கள்:
புதினா – ஒரு கைப்பிடியளவு
ஏலக்காய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பனை வெல்லம் – தேவையான அளவு
சோம்பு – 1/2 ஸ்பூன்
கிராம்பு பொடி – 1/4 ஸ்பூன்
அசிடிட்டி பாட்டி வைத்தியம் – கஷாயம் செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சோம்பு மற்றும் கிராம்பு பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு புதினா இலை, இடித்த ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
இறுதியாக பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்பளர் அளவு சுண்டும் வரை நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்.
பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும். இவ்வாறு அருந்துவதினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும்.
No comments:
Post a Comment