என் வெற்றிக்கு இதுதான் காரணம்.. கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
கொளத்தூர் டெம்பிள் ஸ்கூலில் இன்று பொதுநலச் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில்தான் நாங்கள் முழுமையாக ஈடுபட்டோம்.
வேடிக்கையாக அல்ல உண்மையாக சொல்கிறேன், முதலமைச்சர், பொறுப்பேற்ற அமைச்சர்கள் யாரும் அந்த துறையை கவனிக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து மருத்துவத் துறையை கவனித்தோம். நான் உள்பட அனைவரும் சுகாதார துறை அமைச்சராகத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறோம்.
எம்.எல்.ஏவாக இருந்தபோது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் தொகுதிக்கு வந்தேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வாரத்துக்கு ஒரு முறை வருகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அப்படித்தான். அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை பயன்படுத்தி நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றினார்கள்.
No comments:
Post a Comment