மண்ணில் தோன்றும் அம்மன் சிலைகள்; மாணவன் அருள்வாக்கு பலிக்கும் மர்மம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 26, 2021

மண்ணில் தோன்றும் அம்மன் சிலைகள்; மாணவன் அருள்வாக்கு பலிக்கும் மர்மம்!

மண்ணில் தோன்றும் அம்மன் சிலைகள்; மாணவன் அருள்வாக்கு பலிக்கும் மர்மம்!








வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை பாவோடம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் அடிக்கடி அருள் வந்து பேசுவது வழக்கம் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு திடீரென மோகன்ராஜிக்கு அருள் வந்துள்ளது. அப்போது கௌண்டண்யா ஆற்றங்கரையோரம் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்கு பள்ளம் எடுக்குமாறு கூறியுள்ளார்.
பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் அங்கு பள்ளம் தோண்டியபோது சுமார் 5 அடி ஆழத்தில் ஒரு அடி அளவுள்ள கெங்கையம்மன் சிரசு கல்சிலை கிடைத்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர். பின்னர், அந்த சிலையை அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த தகவலறிந்து குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாவோடம்தோப்பு பகுதிக்கு வந்து சாமி சிலையை வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாணவன் மோகன்ராஜிக்கு மவுசு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad