வசமா மாட்டிக்கிட்டு விழிக்கும் ஓபிஎஸ்; அடுத்து நடக்கப் போவது என்ன?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு டெல்லி மேலிடம் நெருக்கமாக இருந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம் அதிமுகவிற்குள் எடப்பாடி பழனிசாமி தரப்பை ஓரளவு சமாளித்து வருகிறார். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் இருக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓரங்கட்டுவதை எடப்பாடியார் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். முதல்வர் வேட்பாளர் ஆகட்டும், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வாகட்டும், எதிர்க்கட்சி அந்தஸ்து ஆகட்டும் எல்லாவற்றையும் கச்சிதமாக எடப்பாடி பழனிசாமி தன்வசப்படுத்திக் கொண்டார்.
No comments:
Post a Comment