கொங்கு மண்டலத்திற்கு ஸ்கெட்ச்; கனிமொழியை ஓவர்டேக் செய்யும் உதயநிதி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

கொங்கு மண்டலத்திற்கு ஸ்கெட்ச்; கனிமொழியை ஓவர்டேக் செய்யும் உதயநிதி?

கொங்கு மண்டலத்திற்கு ஸ்கெட்ச்; கனிமொழியை ஓவர்டேக் செய்யும் உதயநிதி?



குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றியால் திமுக ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து தனது தொகுதியில் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தெருவாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி பக்கம் செல்லாத நாளே இல்லை எனலாம். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கோவை பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வால்பாறை தொகுதிக்கு சென்று தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மலைவாழ் மக்களிடம் வெகு இயல்பாக உரையாடினார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை தொடங்கி வைத்தார். அடுத்ததாக பொள்ளாச்சி தொகுதி ராசாக்காபாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின்னர் பெரிய நெகமம் பகுதியில் கொரோனா சிகிச்சை முகாமை திறந்து வைத்தார்.

இதற்கிடையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சியில் இஸ்லாமியக் குடும்பங்களுக்கு உதயநிதி கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்கள் கலந்து கொண்டனர். கட்சி சார்பிலும் ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர். மேலும் உதயநிதியை பார்ப்பதற்காகவே அப்பகுதி மக்கள் பலர் குவிந்தனர்.

ஏற்கனவே கொரோனா 2வது அலையின் தீவிரம் தமிழகம் முழுவதும் குறைந்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தில் மட்டும் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் உதயநிதியின் நிகழ்வு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் போதிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றியே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad