அமமுக பழனியப்பனை வரவேற்கும் திமுக எம்.பி!
அமமுக நிர்வாகிகள் தேர்தலுக்குப் பின்னர் தெறித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தாய்க்கழகமான அதிமுகவில் தஞ்சம் அடைந்துவிட வேறு சிலரோ ஆளும் கட்சியான திமுக பக்கம் நகர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் பரமசிவன் ஐயப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனுக்காக எம்.எல்.ஏ. பதவியை இழந்து, கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதுதவிர அமமுக முக்கிய புள்ளிகளிடம் செந்தில் பாலாஜி பேசிவருவதாக கூறப்படுகிறது. அதில் ஹிட் லிஸ்டில் இருப்பவர் அமமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன். அவர் திமுகவில் இணைவதாக தகவல்கள் பரவிவரும் நிலையில் திமுக எம்.பி. செந்தில் குமார் அதை வரவேற்றுள்ளார்.
தர்மபுரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான, 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை சீன தூதரகம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment