உங்களுக்கு புரிஞ்சாதான் ஆச்சரியம்.. எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின் தடை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, அணில்களும் மின் தடை ஏற்பட ஒரு காரணம் என கூறினார். இதையடுத்து அவரை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் தடை குறித்து விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செந்தில் பாலாஜி ட்விட்டரில், “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.
முதலில் பழனிசாமியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment