இ- பாஸ், இ- பதிவு தேவையில்லை: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 5ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வகை 2 மற்றும் 3 இல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேர தளர்வுகளுடன், கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுளள்து.
வகை 2 மாவட்டங்கள்:
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்
வகை 3 மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
No comments:
Post a Comment