அமைச்சர் அன்பில் மகேஷை வியக்க வைத்த மதுரை சிறுமி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

அமைச்சர் அன்பில் மகேஷை வியக்க வைத்த மதுரை சிறுமி!

அமைச்சர் அன்பில் மகேஷை வியக்க வைத்த மதுரை சிறுமி!


தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இடையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதும், கடந்த ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக பள்ளிகூடங்கள் திறக்கப்படாத நிலையில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், மதுரை மகபூப்பாளையம், திருப்பரங்குன்றம், தோப்பூர், சுந்தராஜபுரம், சொக்கிகுளம், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிடங்களில் தன்மை குறித்து அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அனைத்து பள்ளிகூடங்களிலும் உள்ள கட்டிடங்களில் தன்மை, கழிப்பறை தேவைகள் குறித்து ஆய்வு அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.

தோப்பூரில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்த போது, அவர் முன்பு அந்தப் பள்ளியில் பயிலும் சிறுமி திருக்குறள் சொல்லி அசத்தினார். அதை வியப்புடன் கண்ட அமைச்சர், அந்த சிறுமிக்கு அவர் கையெழுத்திட்ட புத்தகத்தை பரிசாக அளித்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad