தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியாகும் அறிவிப்பு!
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கொரோனா இரண்டாவது அலை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாநிலங்கள் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. தினந்தோறும் பாதிப்பு குறைந்து வருவதால் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் தமிழ்நாடு முழுவதும் சகஜ நிலைமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தெலுங்கானாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை பிற மாநிலங்களும் பின் தொடர வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment