திருமலையை அலறவிட்ட சிறுத்தை புலி; அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

திருமலையை அலறவிட்ட சிறுத்தை புலி; அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்!

திருமலையை அலறவிட்ட சிறுத்தை புலி; அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்!


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத்து பெரிதும் குறைந்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தை ஒத்திவைத்து வருகின்றனர். இ-பாஸ் கிடைத்து உரிய அனுமதி பெறும் பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்கின்றனர்.

நேற்றைய தினம் வெறும் 8,799 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 3,224 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். ஏழுமலையான் உண்டியலில் ரூ.54 லட்சம் வசூலாகியுள்ளது. நாளுக்கு நாள் குறைந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கையால் திருமலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

விலங்குகளின் நடமாட்டம் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வன அதிகாரிகள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் எதிர்பாராத வகையில் விலங்குகள் வெளியேறி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை புலி வெளியே வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad