10,12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

10,12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு!

10,12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு!


கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே நிலையில், அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 10, 11ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12ஆம் வகுப்பில் எடுத்த பருவத் தேர்வு, யூனிட் தேர்வு, செய்முறைத் தேர்வு உள்ளிட்டவைகளில் எடுத்த மதிப்பெண்கள் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த நடைமுறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் நேரில் தேர்வெழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2021-22 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் எனத் தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும். ஒவ்வொரு பருவத்திலும் சுமார் 50 சதவீத பாடத்திட்டங்கள் இருக்கும் என்றும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல் பருவத் தேர்வில் கொள்குறி வகையில் கேள்விகள் இருக்கும். 90 நிமிடங்கள் நடக்கும் இத்தேர்வைக் கண்காணிக்க வெளியில் இருந்து கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள். இரண்டாவது பருவத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இத்தேர்வு 2 மணி நேரம் வரை நடக்கும். இரு பருவங்களில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். இத்தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad