10 நாட்களாக ஆட்டுக்குட்டியுடன் காத்திருக்கும் வனத்துறை: சிறுத்தை வருமா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

10 நாட்களாக ஆட்டுக்குட்டியுடன் காத்திருக்கும் வனத்துறை: சிறுத்தை வருமா!

10 நாட்களாக ஆட்டுக்குட்டியுடன் காத்திருக்கும் வனத்துறை: சிறுத்தை வருமா!

சிவராத்திரி, அமாவாசை, பிரதோசம் போன்ற விசேச நாட்களில், தேனி பெரியகுளம் கைலாசநாதர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். இந்த சூழலில் கடந்த ஜூன் 23ஆம் தேதி, கைலாசநாதர் கோயில் மலையிலிருந்து சிறுத்தை ஒன்று கீழிறங்கி வரும் வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனை அறிந்த வனத்துறையினர், உடனடியாக, கைலாசநாதர் கோயில் மலைக்குச் சென்று ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், மலை அருகே விளை நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால் கோயிலுக்குக் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கிரிவலப் பாதையில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

அதேபோல், சிறுத்தையைப் பிடிக்க ஜூன் 27ஆம் தேதி ஒரு கூண்டும், ஜூன் 29ஆம் தேதி மற்றொரு கூண்டும் வைக்கப்பட்டது. அதில் உயிருள்ள ஆட்டுக்குட்டிகள்
வைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்களான நிலையில், சிறுத்தை இன்று வரை கேமராவிலும், கூண்டிலும் பிடிபடவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad