அடேங்கப்பா..! 300 அடி உயர மணற்புயல் - மற்றொரு பேரிடரை சந்தித்த நாடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

அடேங்கப்பா..! 300 அடி உயர மணற்புயல் - மற்றொரு பேரிடரை சந்தித்த நாடு!

அடேங்கப்பா..! 300 அடி உயர மணற்புயல் - மற்றொரு பேரிடரை சந்தித்த நாடு!

சீனாவில் 300 அடி உயரத்துக்கு மணற்புயல் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்தனர். 1,000 வருடங்களில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை என சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

இந்நிலையில் சீனாவில் பிரமாண்ட மணற்புயல் எழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் டன்ஹூவாங் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 300 அடி உயரத்துக்கு மணற்புயல் ஏற்பட்டது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விபத்துகளை தவிர்க்க சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த மணற்புயலால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 5 நிமிடத்தில் மொத்த நகரத்தையும் மணற்புயல் சூழ்ந்துள்ளது. திரைப்படக் காட்சிகளில் பேரலை தாக்குவதுபோல் எழுந்த மணற்புயல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad