40 கோடியை தட்டி தூக்கிய இந்தியர்.. துபாய் லாட்டரியில் ஜாக்பாட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

40 கோடியை தட்டி தூக்கிய இந்தியர்.. துபாய் லாட்டரியில் ஜாக்பாட்!

40 கோடியை தட்டி தூக்கிய இந்தியர்.. துபாய் லாட்டரியில் ஜாக்பாட்!


துபாய் லாட்டரியில் இந்தியர்கள் வெற்றிபெறுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த வரிசையில், மீண்டும் ஒரு இந்தியர் துபாய் லாட்டரியில் சுமார் 40 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரஞ்சித் சோமராஜன் என்பவர் அபுதாபியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். இந்நிலையில், கடைசியாக அவரை அதிஷ்டம் தொட்டுவிட்டதாக தெரிகிறது.

லாட்டரியில் 20 மில்லியன் திர்ஹாம்ஸ் தொகையை (சுமார் 40 கோடி ரூபாய்) வெற்றிபெற்றுள்ளார் ரஞ்சித் சோமராஜன். இதுகுறித்து அவர், “லாட்டரியில் முதல் பரிசை வெல்வேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு கிடைக்கும் என நம்பியிருந்தேன்.2008ஆம் ஆண்டு முதல் இங்குதான் இருக்கிறேன். துபாய் டாக்ஸியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். வேறு நிறுவனங்களிலும் வேலை செய்திருக்கிறேன். கஷ்டகாலம் என்பதால் நல்ல சம்பளம் கிடைக்குமென சில நிறுவனங்களுக்கு மாறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில், லாட்டரியில் 40 கோடி ரூபாய் கிடைத்தது ரஞ்சித் சோமராஜனுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad