நவ்ஜோத் சிங் - அமரீந்தர் சிங் நாளை நேருக்கு நேர் சந்திப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

நவ்ஜோத் சிங் - அமரீந்தர் சிங் நாளை நேருக்கு நேர் சந்திப்பு!

நவ்ஜோத் சிங் - அமரீந்தர் சிங் நாளை நேருக்கு நேர் சந்திப்பு!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பதவி ஏற்கும் நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர்
அமரீந்தர் சிங் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததால், மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் அதிகரித்தது.
உட்கட்சிப் பூசலை தீர்க்கும் வகையிலும், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கிலும், நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர் சிங் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் அழைத்து பேசியது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக இருவரும் தெரிவித்தனர்.


இதை அடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து, கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் கட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், கட்சி மூத்த தலைவர்கள் அனைவருக்கும் முறையாக அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன. நவ்ஜோத் சிங் சித்து பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம்

இந்நிலையில், நவ்ஜோத் சிங் பதவி ஏற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad