தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்: சீனியர்கள் விரக்தி!
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மீன்வளத்துறை, கால்நடைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைகளின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தன. அதற்கான ரேஸில் தற்போதைய நிலவரப்படி, ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவு, அதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக முன்னாள்
ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். துடிப்பான இளைஞர் ஒருவரை பாஜக மேலிடம் நியமிக்க திட்டமிட்டிருந்ததால், தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் விரக்தியடைந்துள்ளனர்.
கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., திடீரென தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். அரசியல் ரீதியான பேட்டி, வலதுசாரி சிந்தனையாளர், சுயசார்பு பேச்சு, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பல யூகங்கள் அவரை சுற்றி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பாஜகவில் இணைந்தார்.
No comments:
Post a Comment