தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எவ்வளவு? - ராதாகிருஷ்ணன் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எவ்வளவு? - ராதாகிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எவ்வளவு? - ராதாகிருஷ்ணன் தகவல்!

தமிழகத்தில், 11 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில், கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால், பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட பொது மக்களிடையே ஆர்வம் நிலவி வரும் நிலையில், தடுப்பூசிகள் இல்லாததால், மாநில அரசுகள் செய்வதறியாது தவித்து வருகின்றன. இதை அடுத்து தமிழகத்திற்கு கூடுதல் அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்து சேர்ந்தன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கிற்கு வந்த தடுப்பூசிகளை சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 11 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார். பின்னர் தடுப்பூசி சேமிப்பு கிடங்கிலிருந்து மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டிலேயே, மஹாராஷ்டிர மாநிலத்தில் தான், ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad