ஓபிஎஸ் வாழ்த்தும், பாஜகவின் கோபமும்; கூல் பண்ணுமா அதிமுக?
தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி தொடர்கிறது. குறிப்பாக மக்களவை தேர்தல் படுதோல்விக்கு பின்னரும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கைகோர்த்து நடைபோட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவை பின்னால் இருந்து பாஜக தான் இயக்குகிறதோ என்ற விமர்சனத்தை மேலும் வலுவாக்கியது. இந்த சூழலில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு நல்ல பாடம் கற்று தந்திருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த நிலையில் பாஜக உடனான கூட்டணி தொடர வேண்டுமா என்ற விஷயத்தை சிந்திப்பதற்கு நிறைய கால அவகாசத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இருப்பினும் மத்திய பாஜக அரசின் தயவை ஏதோவொரு வகையில் அதிமுக எதிர்பார்த்து நிற்கிறது. எனவே தான் கூட்டணியை விட்டு கொடுக்காமல் முட்டு கொடுக்கின்றனர். இதற்கு சமீபத்திய நிகழ்வுகளை உதாரணமாக கூறலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த பேட்டியில், பாஜக உடனான கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிட்டது. இதனால் தான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தோம் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன், உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என்று பதிலடி கொடுத்தார். இது தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பிற்கு ஆளாக்கியது.
No comments:
Post a Comment