திமுக அமைச்சருக்கு பறந்த போன் கால்; அதிரடியாக சஸ்பெண்ட் நடவடிக்கை!
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனடியாக அந்த சாலையை ஆய்வு செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்
இதையடுத்து சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுபாடு குழுவினருடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் கீதா அவர்கள், சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே அமைக்கப்பட்ட சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முறையான விசாரணை மேற்கொண்டார்.
பொறியாளர்கள் பணியிடை நீக்கம்
அதில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப் பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து
அதிரடி காட்டிய திமுக அமைச்சர்
நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செந்தில் உத்தரவிட்டுள்ளார். மேலும் சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அன்ட் கோ-வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment