விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி செஞ்ச காரியம்; டெல்லியில் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி செஞ்ச காரியம்; டெல்லியில் பரபரப்பு!

விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி செஞ்ச காரியம்; டெல்லியில் பரபரப்பு!


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக ஜந்தர் மந்தர் பகுதிக்கு 200 விவசாயிகள் படையெடுத்துள்ளனர். கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர்.

டெல்லிக்குள் மீண்டும் விவசாயிகள்

இது வன்முறையில் முடிந்தது. இதையடுத்து தற்போது தான் மீண்டும் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்துள்ளனர். இவர்களை சிங்குவா எல்லைப் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை டெல்லி போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அதே இடத்தில் தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கூட்டத்தொடர் முடியும் வரை போராட்டம்

இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், எங்களின் போராட்டம் 8 மாதங்களைக் கடந்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் எங்களது கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துரைத்து வருகிறோம். நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகளின் நாடாளுமன்றம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad