தமிழ்நாட்டில் அடித்து பெய்யும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

தமிழ்நாட்டில் அடித்து பெய்யும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடித்து பெய்யும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.



கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரி (கடலூர்) 8, மங்களபுரம் (நாமக்கல்), ஆத்தூர் (சேலம்) தலா 5, பெரம்பூர் (சென்னை), பரங்கிப்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) தலா 4, சிதம்பரம் (கடலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 3, தேவலா (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சேலம், ஜெயம்கொண்டம் (அரியலூர்), நடுவட்டம் (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சோலையார் (கோவை), சின்னக்கல்லார் (கோவை) தலா 2, சென்னை நுங்கம்பாக்கம், வால்பாறை தாலுகா ஆபீஸ் (கோவை), விருதாச்சலம் (கடலூர்), கடலூர் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல் பகுதிகள்:

இன்று தமிழ்நாடு- ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று வட கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 28ஆம் தேதி மத்திய வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 29ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஜூலை 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad