எடப்பாடியின் வலது கரத்துக்கு வச்ச குறி: சிக்கப் போகும் எஸ்.பி.வேலுமணி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

எடப்பாடியின் வலது கரத்துக்கு வச்ச குறி: சிக்கப் போகும் எஸ்.பி.வேலுமணி?

எடப்பாடியின் வலது கரத்துக்கு வச்ச குறி: சிக்கப் போகும் எஸ்.பி.வேலுமணி?


அதிமுக ஆட்சியில் பல அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அதற்கான ஆதாரங்களுடன் ஆளுநரை சந்தித்தார் எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.

அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் கடந்த ஆட்சியின் போதே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டது. அதனால், இதுகுறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad