தருமபுரி நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தை மூடல் பக்ரீத் விற்பனை புஷ்: காசுக்குக் கதறும் விவசாயிகள்!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம். இதற்கு மாற்றுத் தொழிலாக ஆடு மற்றும் மாடு வளர்க்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இப்பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழி மற்றும் மாடுகளை நல்லம்பள்ளியில் நடைபெறும் வாரசந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.
இந்த சந்தையில் கால்நடைகளை வாங்கத் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் அல்லாமல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகியே அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
குறிப்பாகப் பொங்கல், தீபாவளி,ரம்ஜான், பக்ரீத் ஆகிய விழாக் காலங்களில் லட்சக்கணக்கான ஆடு, கோழிகள் விற்பனைக்கு வரும். இந்த சூழலில் கொரோனா தொற்று பரவாமலிருக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் சந்தைகளில் அதை விற்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இதனால் விவசாயிகள் தங்களது அன்றாட செலவுக்குக் கூட வருமானமின்றி தவித்து வந்தனர். இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சந்தைகள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தருமபுரி நல்லம்பள்ளி வாரசந்தை சாலையோரத்தில் இன்று கூடியது.
No comments:
Post a Comment