வன்னியர் இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை: தமிழக அரசு வாதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

வன்னியர் இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை: தமிழக அரசு வாதம்!

வன்னியர் இடஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை: தமிழக அரசு வாதம்!

வன்னியர்களின் கோரிக்கையான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோத தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலும் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்புகள் (எம்.பி.சி), டி.என்.சி. (DNC) சமூகத்துக்கான தற்போதுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்கும் இந்த சட்டத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினர் பாதிக்கப்படுவதாக, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்தச் சட்டத்தை நடப்புக் கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக

தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து, வழக்கு நிலுவையில் உள்ளபோது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

அதன் தொடர்சியாக, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா என்று கேள்வி எழுப்பு இன்று பிற்பகலுக்கும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேற்கண்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆஜராகிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டால் எப்பிரிவினருக்கும் பாதிப்பு இல்லை; இதுதொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.



இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அரசாணை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 2ஆவது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad