ராகுல் காந்தியால் தூங்காமல் தவிக்கும் பாஜக: அடித்துச் சொல்லும் ஜோதிமணி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

ராகுல் காந்தியால் தூங்காமல் தவிக்கும் பாஜக: அடித்துச் சொல்லும் ஜோதிமணி!

ராகுல் காந்தியால் தூங்காமல் தவிக்கும் பாஜக: அடித்துச் சொல்லும் ஜோதிமணி!


உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் ஆகியோரது செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. “உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஓர் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad