ஊரடங்கு தளர்வு: தமிழகம் முழுக்க பேருந்துகள் இயங்க அனுமதி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 2, 2021

ஊரடங்கு தளர்வு: தமிழகம் முழுக்க பேருந்துகள் இயங்க அனுமதி..!

ஊரடங்கு தளர்வு: தமிழகம் முழுக்க பேருந்துகள் இயங்க அனுமதி..!

தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், ஜூலை 12ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.


அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

*உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தாங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி

*தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் தேநீர் அருந்த அனுமதி.


* கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி செய்லபட அனுமதி.

* ஐடி கம்பெனிகள், தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செய்லபட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

* துணிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

* வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை செய்லபட அனுமதி. மால்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி. திரையரங்குகள், விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை.

* மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.


* மாவட்டங்களுடக்கியே பயணிக்க இ பாஸ் - இ பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad