தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 2, 2021

தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து..!

தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து..!

 தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரேகட்ட தளர்வுகளுடன் ஜூலை 12ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5ம் தேதி முதல் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுளள்து.

தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்த கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.


மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் 50% இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிகள் பயணிக்க பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி

உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி

பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி

அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல 12ம் தேதி (திங்கள்) முதல் இபாஸ் தேவையில்லை



நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்

No comments:

Post a Comment

Post Top Ad