போத்தனூர் ரயில் நிலையத்திற்கு பெரும் அங்கிகாரம்: தரசான்றிதழ் வழங்கி கவுரவம்!
கோவை போத்தனூரில் உள்ள தெற்கு ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனைக்கு மதிப்புமிக்க ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (ஐஎம்எஸ்) சார்பில் தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு ரயில்வே பணிமனைகளில் போத்தனூர் பணிமனை, அதிக அளவிலான தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளன என்பது உண்மை.
மதிப்புமிக்க ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்புகளான (ஐஎம்எஸ்) தர மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, உணவு பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட அமைப்புகள் வழங்கியுள்ளன.
இதன் மூலம் 62 வருட பணிமனை சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக போத்தனூர் ரயில்வே பணிமனை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment