தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா இரண்டவாது அலை இந்தியாவில் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் முதல் அலையை விட மோசமான பாதிப்புகளை இரண்டாவது அலை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் வரை சென்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என பல பிரச்சினைகள் இருந்த போதும் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி பாதிப்பை குறைத்தது.

தற்போது நாள் ஒன்றுக்கு 1850 என்ற அளவில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவிலோ 20,000க்கும் அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மற்ற மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அரசின் மூத்த உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில் அது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடைபெற்றுவருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த முறை பள்ளிகள் திறப்பு குறித்து கட்டாயம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவும் வாய்ப்புள்ளது.திரையரங்குகளை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மதுபான பார்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad