மேகதாது விவகாரம்: எடியூரப்பாவுடன் ஏன் பேச்சுவார்த்தைக்கு செல்லக்கூடாது?
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக்கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக்கொள்ளக் கூடாது.
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகதாது பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகதாது அணை மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.
No comments:
Post a Comment