நீங்க இல்லன்னா அப்ப வேற யாரு? - சசி தரூர் கேள்வி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

நீங்க இல்லன்னா அப்ப வேற யாரு? - சசி தரூர் கேள்வி

நீங்க இல்லன்னா அப்ப வேற யாரு? - சசி தரூர் கேள்வி

பா.ஜ.க., உளவு பார்க்கவில்லை எனில், வேறு யாரு உளவு பார்த்தது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 40 பேரின் மொபைல் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்நிலையில், இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
உளவு மென் பொருள் அதிக விலை கொண்டது. அதனை அரசால் மட்டுமே வாங்க முடியும் . மென் பொருள் மூலம் தனி மனித ரகசியங்களை பா.ஜ.க., உளவு பார்க்கவில்லை எனில் வேறு யார் பார்த்தது?


No comments:

Post a Comment

Post Top Ad