செல்போன் சிக்னலில் சிக்கல்: உயிரை பணயம் வைக்கும் கிராமப்புற மாணவர்கள்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறையை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளன.
மாணவர்களுக்கு இந்த நீண்ட ஊரடங்கு விடுமுறையில் படிப்பு மீதுள்ள கவனம் சிதறக்கூடாதென்பதற்காக ஆன்லைன் வகுப்பு முறை கடைபிடிக்கப்பட்டாலும், ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் சவாலாகவே இருந்து வருகிறது. சாதாரண வருமானத்தை ஈட்டும் பல பெற்றோர் குழந்தைகளுக்கு ஆண்டிராய்டு போன் வாங்கி தர முடிவதில்லை.
போன் இருந்தாலும் சில இடங்களில் சிக்னல் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களின் பாலியல் அட்டூழியங்களென பல சவால்களை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். அதேபோல, ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் காட்டும் அலட்சியங்கள், வீடியோவை அமத்திவிட்டு பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கும் சில மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் இருக்கும் பிரச்சினைகளால் ஆன்லைன் வகுப்புகள் சீராக இல்லை.
No comments:
Post a Comment