நூலகம் திறந்ததுமே நல்ல செய்தி; மகிழ்ச்சியில் துள்ளும் வாசகர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

நூலகம் திறந்ததுமே நல்ல செய்தி; மகிழ்ச்சியில் துள்ளும் வாசகர்கள்!

நூலகம் திறந்ததுமே நல்ல செய்தி; மகிழ்ச்சியில் துள்ளும் வாசகர்கள்!

கொரோனா இரண்டாம் கட்ட ஆலையால் தமிழகத்தில் நூலகங்கள் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 74 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள மாவட்ட மைய நூலகம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இணைய நூலகங்கள் 33, ஊர்ப்புற நூலகங்கள் 69, திறக்கப்பட்டுள்ளன இந்த நூலகங்கள் இன்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த நூல்கள் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 483 மொத்த உறுப்பினர்கள் 25 ஆயிரத்து 890 பேர் உள்ளனர். தற்பொழுது ஒவ்வொரு நூலகங்களுக்கும் தமிழ் நூல்களான 103 புதிய நூல்கள் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழில் ஆறாயிரம் தலைப்புகள் 75 ஆயிரம் நூல்களும், ஆங்கிலத்தில் 1500 தலைப்புகளில் பத்தாயிரம் நூல்களும் என கொரோனாவிற்கு பிறகு தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும் கொரோனா நோய்த்தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது வாசகர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட வாசகர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட வாசகர்கள் நூலகத்தில் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் உட்பிரிவில், நாளிதழ் பிரிவு, குறிப்புதவி பிரிவு, நூல் வழங்குதல், புதிய நூல்கள் பிரிவு, உள்ளிட்டவை 100 சதவீத பணியாளர்களுடன் வழக்கம்போல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad