"சிவசேனா எங்கள் எதிரி அல்ல" - ஆசை வலை விரிக்கும் பா.ஜ.க.,
சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரி இல்லை என, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர்
டிரெண்டிங்
எல்லையில் பதற்றம்
ஊரடங்கில் தளர்வுகள்
திருப்பதி சர்ப்ரைஸ்
கொரோனா 3வது அலை
Tamil NewsLatest NewsIndia NewsShiv Sena Was Never Our Enemy Says Devendra Fadnavis On Renewal Of Ties
"சிவசேனா எங்கள் எதிரி அல்ல" - ஆசை வலை விரிக்கும் பா.ஜ.க.,
Velayuthan Murali | Samayam TamilUpdated: 04 Jul 2021, 10:11:00 PM
1
3
3
Subscribe
சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரி இல்லை என, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்
Fadnavis + Uddav
ஹைலைட்ஸ்:
சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரி இல்லை
முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கருத்து
20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரி இல்லை என, மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர்
தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி, முதலமைச்சர் பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்காததால், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும் என்று, எதிர்க்கட்சியான பா.ஜ.க., விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரி கட்சி அல்ல. எங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தான் மஹாராஷ்டிர மாநில மக்கள் வாக்களித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக எங்கள் கூட்டணியில் இருந்து அவர்கள் விலகி விட்டனர். சூழ்நிலையை பொறுத்து சிவசேனா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment