இந்தியா ஏழை நாடு என்றால், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

இந்தியா ஏழை நாடு என்றால், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி

இந்தியா ஏழை நாடு என்றால், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி


மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் அடங்கிய பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு விசாரணை வந்தது. அப்போது, 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கொள்முதல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து அரசு தரப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக கூறினார். மேலும், சாலைகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்த பின்னர் போதுமான பேருந்துகள் நீதிமன்ற உத்தரவின்படி கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழக சார்பில் ஆஜரான வக்கீல், மாற்றுத்திறனாளிகள் வசதிகொண்ட பேருந்துகளை வாங்க 58 லட்சம் செலவாகிறது.

இந்தியா ஏழை நாடு. மாநில அரசு தற்போது நிதி நெருக்கடிகையை சமாளித்து வருகிறது. தற்போது 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்திய ஏழை நாடு என்றால் ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? என கேள்வி கேட்டதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இடைக்கால தடை விதித்து 4 வாரங்களுக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad