கொரோனாவால் உறவுகளை இழந்தவர்களுக்காகச் சேலத்தில் ஊன்றுகோல் உதவி மையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

கொரோனாவால் உறவுகளை இழந்தவர்களுக்காகச் சேலத்தில் ஊன்றுகோல் உதவி மையம்!

கொரோனாவால் உறவுகளை இழந்தவர்களுக்காகச் சேலத்தில் ஊன்றுகோல் உதவி மையம்!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகள், கணவனை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊன்றுகோல் 2021-2022 என்ற உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிக்காக நேரடியாக உரியச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தேவையான உதவிகளை இந்த ஊன்றுகோல் சேவை மையத்தின் மூலம் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், பிள்ளைகளை
இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்

இதற்காக மாவட்ட ஆட்சியரின் அலுவலக முதல் தளத்தில் உள்ள அறை எண் 120இல் அணுகி உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad