தமிழ் மாநில காங்கிரஸ் மாநில கூட்டம் மதுரையில் நடைப்பெற்று!
தமிழ் மாநில காங்கிரஸ் தென்மண்டல மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
வரும் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக மட்டுமல்லாமல், கொரோனா விழிப்புணர்வு நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
அதன் மூலம் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வுகள் செய்ய உள்ளேன்.
தொடர்ந்து விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென தமாகா வலியுறுத்தி வருகிறது. தொடர்ந்து கொரோனா இறப்புச்சான்றிதழ் முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment