முதல்வர் ஸ்டாலின் ரெடி பண்ணும் கிப்ட்; குஷியில் கூட்டணி கட்சிகள்!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் சலசலப்பு நிலவியது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கேட்ட எண்ணிக்கையில் திமுக தலைமை ஒதுக்கீடு செய்யவில்லை. நீண்ட சமாதானத்திற்கு பின்னரே கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டன. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
தற்போது அமைந்திருக்கும் ஆட்சியில் முழுக்க முழுக்க திமுக மட்டுமே பங்களிப்பை செலுத்தும் வகையில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் திமுக ஆட்சியில் தங்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. முதலில் எஞ்சிய மாவட்டங்களில் ஊராட்சிகளிலும், அதன்பின்னர் அனைத்து மாவட்ட நகராட்சிகளிலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment