அணையை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: கர்நாடகாவை எச்சரிக்கும் அண்ணாமலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

அணையை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: கர்நாடகாவை எச்சரிக்கும் அண்ணாமலை

அணையை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க முடியாது: கர்நாடகாவை எச்சரிக்கும் அண்ணாமலை

கர்நாடகாவின் புதிய முதல்வராக பாஜக எம்எல்ஏக்களின் முடிவின்பேரில் பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுள்ளார். முதல்வரான பிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் பேட்டியில், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டியே தீரும் என்றும் அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்றும் கூறினார்.
மேலும், காவிரி படுகையில் உள்ள உபரிநீரில் கர்நாடக மாநிலத்துக்கு முழு உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக எடியூரப்பாவும் மேகதாது அணை விவகாரத்தில் பிடிவாதமாக இருந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பொம்மை, தனது முதல் பேட்டியிலேயே அணையை கட்டுவோம் என்று காட்டமாக கூறியுள்ளார்.

அதற்கு தமிழகத்தில் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.


மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை கூறியதற்கு, 'மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்று அண்ணாமலை ஆவேசமாக கூறினார். மேலும், கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது என்றும் அதை நாங்கள் கட்ட விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், '' காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட வேண்டும் என்பதில், இதுவரை முதல்வராக இருந்த எடியூரப்பாவும், இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் உறுதியாக உள்ளனர். மேகதாது அணையைக் கட்டுவதற்காக அறத்துக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad